விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வக்கீல் கணபதி செய்திருந்தார். அம்பை நகராட்சி பகுதியில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி

அம்பை, செப். 25: அம்பை நகராட்சி பகுதியில் ஆணையாளர் பவுண்ராஜ் அறிவுரைப்படி தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் ‘தூய்மையே சேவை’ என்ற சிறப்பு நிகழ்ச்சி கடந்த செப். 15ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வரும் அக்.2ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு பாலிதீன் பை ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு போட்டி, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக பாலித்தீன் பை ஒழிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மேலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலம் தூய்மையே சேவை என்ற தலைப்பில் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. பொது மக்களுக்கு பாலிதீன் பயன்பாட்டை தவிக்க நகராட்சி சார்பில் துணி பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இப்பணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம் தலைமையில் மேற்பார்வையாளர்கள் தஸ்தகீர், ஆறுமுகம், ராமச்சந்திரன், மேற்பார்வையாளர் தூய்மை இயக்கம் வீரபாகு, சங்கரி, பேச்சியம்மாள், சேக், வெங்கட்ராமன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: