கறம்பக்குடி, செப். 21: கறம்பக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்ககோரி 2 கிராம ெபண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் அரியாண்டி, காஞ்சிரான்கொல்லை ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் சிறு மின் விசை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றின் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இவை பழுடைந்ததாலும், நீர் மட்டம் முற்றிலும் குறைந்து போனதன் காரணத்தினாலும் இப்பகுதி மக்கள் கடந்த குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதனை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்ககோரியும் நேற்று காலை 2 கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் காலி குடங்களுடன் அரியாண்டி, காஞ்சிரான்கொல்லை பேருந்து நிறுத்தங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.