கரூர்,செப்.21:தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்புசெழியன் விடுத்துள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்வளர்ச்சித்துறையால் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடத்தப்பட்டு ஆட்சிமொழி திட்டச் செயலாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆட்சிமொழி திட்டத்தை மேலும் முனைப்புடன் செயல்படுத்திட செப்டம்பர் 26ம்தேதி முதல் 27ம்தேதி வரை இரண்டு நாட்கள் கரூர் மாவட்டத்தில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெறுகிறது. 26ம்தேதி நடைபெறும் பயிலரங்கத்தை டிஆர்ஓ சூர்யபிரகாஷ் தொடங்கி வைக்கிறார். 27ம்தேதி நடைபெறும் கருத்தரங்கினை கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார்.
இந்த கருத்தரங்களில் தமிழ்வளர்ச்சி இயக்குநர் சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்துக்கு கேடயம் வழங்கவுள்ளார்.விழா ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.