கரூர், செப்.19: கரூர் என்எஸ்கே நகரின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை மூடிக்கு பதிலாக கல்லை வைத்து மூடப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் வெங்கமேடு பகுதியின் என்எஸ்கே நகர் பகுதி உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, என்எஸ்கே நகரில் உள்ள ஒரு தெருவில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பாதாள சாக்கடை மூடியை திறந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்கு பிறகு, அதற்கான மூடி உடைந்த நிலையில் இருந்ததால் மூடியை போடாமல், அருகில் உள்ள பெரிய கல்லை எடுத்து பாதாள சாக்கடையில் முகப்பில் வைத்து விட்டு சென்றுவிட்டனர். தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, மூடிக்கு பதிலாக வைக்கப்பட்டுள்ள கல் உட்புறம் நோக்கி சரிந்த வண்ணம் உள்ளன.