கூடலுார், செப்.19: கூடலூர் நகரில் உள்ள அஞ்சல் நிலையம் மற்றும் ஊட்டி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் ஆகியவற்றில், கடந்த நான்கு நாட்களாக இன்டர்நெட் இணைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் வரவு செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மணியாடர் சேவையும், தபால் பட்டுவாடா சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.