பாஜ முடிவின்படியே தமிழகம் அமையும்

திருச்சி, செப்.18: பாஜ எந்த முடிவை எடுக்கிறதோ அந்த முடிவின் அடிப்படையில் தமிழகம் அமையும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் பாஜ அமைப்புசாரா தொழிலார்கள் மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் மாநில தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். பாஜ மாநில தலைவர் தமிழிசை  கலந்து கொண்டு பேசியதாவது:  சென்னையில் செருப்பு வீசிய சம்பவத்துக்கும் பா.ஜவுக்கும் சம்பந்தம் இல்லை.  அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் ஜி.எஸ்.டிக்கு கொண்டு வந்ததால்தான் விலை குறைந்திருக்கிறது. அதுபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க அதனை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  தொகுதிக்கு கூட ஒன்றும் செய்யாத சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதி ஆகிவிட்டது.  இவ்வாறு தமிழிசை பேசினார். மத்திய இணை அமைச்சர் ெபான்.ராதகிருஷ்ணன் பேசியதாவது: தமிழக அரசுக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகிறது பா.ஜ அரசு.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரை சந்தித்தபோது,   மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2ம் நிலை பணம் கொடுக்கவில்லை என்றார். இதை மோடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.758.6 கோடியும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.631.98 கோடியும் மோடி அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. திருச்சியில் விரைவில் டிபென்ஸ் காரிடர் அமைய உள்ளது. இதனால் விரைவில் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நகரமாக மாறும்.  பாஜ கூட்டணிக்கு ஏங்கும் கட்சி இல்லை. இனி பாஜ எந்த முடிவை எடுக்கிறதோ அந்த முடிவின் அடிப்படையில் தமிழகம் அமையும்.  150 ஆண்டுகால காவிரி பிரச்னையை மோடி அரசு மேலாண்மை ஆணையத்தை அமைத்து சுமூகமாக  தீர்த்து வைத்தது. தமிழகத்திற்கு வரும் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் செல்கிறது. இதற்கு காரணம் தமிழக அரசுக்கு சரியான நடவடிக்கையை எடுக்க தெரிவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: