துறையூரில் அதிமுக பொதுக்கூட்டம்

துறையூர், செப்.18:  அண்ணா பிறந்தாளையொட்டி துறையூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.திருச்சி மாவட்டம் துறையூரில் அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு, நகர ஒன்றிய அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையூர் ஒன்றிய அதிமுக செயலாளர் சேனை செல்வம் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தி ஆகியோர் பேசினர். முன்னாள் அமைச்சர் சிவபதி சிறப்புரையைாற்றினார். முன்னாள் நகர செயலாளர் செல்வம், மாவட்ட கழக துணை செயலாளர் வேம்பு ரெங்கராஜ், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் பொன்.காமராஜ், முன்னாள் ஒன்றியகுழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், மீனவர் அணி கருப்பண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கண்ணன், ஒட்டம்பட்டி கிளைச் செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: