28ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு திமுக தலைவர் கருணாநிதிக்கு குடந்தையில் புகழஞ்சலி கூட்டம்

கும்பகோணம், ஆக. 15: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கும்பகோணம் தலைமை அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குடந்தை, நாகை மண்டலத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் புகழஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. சிஐடியூ பொது செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.  அனைவரும் கருப்பு சட்டை அணிந்து திமுக தலைவர் கருணாநிதியின் உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொமுச பொது செயலாளர் பாண்டியன், தமாகா தலைவர் சோழபுரம் கலியன், காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியநாதன், சிஐடியூ தலைவர் முருகன், அண்ணா தொழிற்சங்க பொது செயலாளர் அருணாச்சலம், ஏஐடியூ அழகிரி பங்கேற்றனர்.

Related Stories: