புதுக்கோட்டை, ஆக. 14: காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று புதுகை கலெக்டர் கணேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கல்லனையில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் காவிரியில் நீர் பாய்ந்து வரும் கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.