கரூர், ஆக. 14: கரூர் மாவட்டம் நெரூரில் உள்ள அக்னீஸ்வரர் கோயில் நடைபெற்ற நாத உற்சவ பெருவிழாவில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு நாதஸ்வரம் வாசித்தனர். கரூர் மாவட்டம் நெரூரில் சவுந்திர உடனுறை அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா நடைபெற்று வருகிறது. 9ம் ஆண்டு நாத உற்சவ விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மங்கள இசை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 5மணி வரை பல்வேறு இசைக்குழுவினரின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.