திருத்துறைப்பூண்டி ஆக.14: திருத்துறைப்பூண்டியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தற்காலிக வீடு கட்டித்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம் பெரியநாயகிபுரம் பகுதிகளில் கடந்த மாதம் 16ம்தேதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 43 கூரைவீடுகளும் மற்றும் 17ம்தேதி மீனாட்சிவாய்க்கால் புதுத்தெருவில் 7 கூரைவீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.இதில் ரூ 1 கோடி மதிப்புடைய பணம், தங்கநகைகள், தானியங்கள், பாத்திரங்கள், உடைகள் முக்கியநிலபத்திரங்கள், குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்றவை எரிந்து விட்டது.அரசு ரூ.5000 நிவாரணம் மட்டுமே வழங்கியது. சேவை அமைப்புகள் பாத்திரங்கள், மளிகை பொருட்கள், உடைகள்வழங்கியது.
தீயினால் வீட்டு சுவர்கள் வெப்பத்தினால் இடிந்து விழுந்துவிட்டது. மீண்டும் வீடுகட்டி குடியேற குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும்.