கரூர், ஆக.14: காவிரியில் கரைபுறண்டு ஓடியும் ஆயக்கட்டு நிலங்கள் வறண்டு கிடக்கிறன. எனவே தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் பாமக துணைபொது செயலாளர் பாஸ்கரன்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரியில் ஒரு லட்சம் கனஅடிக்குமேல் நீர்வந்தும் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர்வரவில்லை. காரணம் காவிரியில் தொடர்ந்து மணல் அள்ளியதால் சுமார் 10மீ அளவுக்கு பள்ளமாகி விட்டது. வாங்கல், நெரூர் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.