கரூர், ஆக. 14: கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் உள்ள அங்கன்வாடி முன்பு இழுபறியில் நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். கரூர் ஊராட்சி ஒன்றியம் கரூர் சேலம் பைபாஸ் சாலையில் பண்டுதகாரன்புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பிரதான சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வரும் இந்த அங்கன்வாடியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அங்கன்வாடியை சுற்றிலும் சுவர் எழுப்பும் வகையில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன், கருங்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது.