கரூர், ஆக. 14: கரூர் மாவட்டம் தளவாபாளையம் பைபாஸ் சாலை பகுதியில் இருந்து சேங்கல்மலைக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் தளவாபாளையம் பகுதியில் இருந்து சேங்கல்மலைக்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாகவே மோசமான நிலையில் இருந்தது. இதனை சீரமைத்து தார்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்திருந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த சாலைய சீரமைக்கும் வகையில், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.