உடுமலை, ஆக.14:பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினமும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 9ம்தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.