தேனி, ஆக. 14: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 357 மனுக்கள் குவிந்தது. தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை கேட்டும், பட்டா மாறுதல், கல்விக்கடன், இலவச தையல் இயந்திரம். காவல்துறை தொடர்பாக 357 மனுக்கள் கலெக்டரிடம் பொதுமக்கள் அளித்தனர்.