பெரியகுளம், ஆக.14: பெரியகுளம் அருகே கும்பக்கரை மற்றம் சோத்துப்பாறை வனப்பகுதியில் மண்வளத்தைப் பாதிக்கச் செய்யும் சாலி மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மரக்கன்றுகளை வளர்த்து அதிக மழைப்பொழிவு பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் முள்வகையைச் சேர்ந்த சாலிமரங்கள் வளர்த்துள்ளனர்.