அவிநாசி: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், அவிநாசி-சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில், இரங்கல் கூட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் அம்பலவாணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.