கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி

அவிநாசி: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், அவிநாசி-சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில், இரங்கல் கூட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் அம்பலவாணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், அவிநாசி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பழனிசாமி, நகர திமுக செயலாளர் பொன்னுசாமி, அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத்குமார், சுப்பிரமணியம், வேலுசாமி மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: