வால்பாறை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் மழை அதிகம் பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததால், நேற்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரி வழக்கம் போல் செயல்பட்டது.