ஏடிஎம் கார்டு மூலம் ரூ48 ஆயிரம் திருட்டு

மதுரை, ஆக. 14: காணாமல் போன ஏடிஎம் கார்டு மூலம் வங்கி கணக்கிலிருந்து ரூ.48 ஆயிரத்தை எடுத்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி லதாதேவி. இவரது ஏடிஎம் கார்டு சில நாட்களுக்கு முன் மாயமானது. இந்நிலையில், லதாதேவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து லதாதேவி கொடுத்த புகாரின் பேரில் விளக்குதூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: