மதுரை, ஆக. 14: ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை ேகாட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வீராசுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை:
விருதுநகர் - சாத்தூர், திருப்பரங்குன்றம் - கள்ளிக்குடி ராமநாதபுரம் - உச்சிப்புளி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இவ்வழித்தடங்களில் ரயில் போக்குவரத்தில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாலக்காடு - திருச்செந்தூர் (வண்டி எண் 56769), திருச்செந்தூர் - பாலக்காடு (வண்டி எண் 56770) ஆகிய ரயில்கள் நாளை (ஆக. 15) முதல் வரும் 31ம் தேதி வரை, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விருதுநகர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த இரு ரயில்களும் ஆக. 15 முதல் வரும் 31ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும், மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் (வண்டி எண் 56770) ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 15 முதல் 31 வரை 145 நிமிடங்கள் தாமதமாக, மதுரையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும்.