மதுரை, ஆக.14: மதுரையில் கோயில் திருவிழாவில் நடந்த மோதல் எதிரொலியாக நேற்று இரவு ரவுடி ஓட ஓடி விரட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மதுரை செல்லூர் கட்டபொம்மன் நகர் பகுதியை சேர்ந்த மதுரைவீரன் மகன் பிரவீன்(எ) பல்செட் பிரவீன் (23). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று செல்லூர் பகுதியில் நடந்த மாரியம்மன் கோயில் விழாவில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரவீன் மற்றொரு பிரிவினரை தாக்கினார். இதனால் அவர்கள் ஆத்திரத்துடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பிரவீன் வீட்டருகே நடந்து சென்றார். அப்போது கோயிலில் தகராறு செய்த நான்கு பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை வழிமறித்தனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்தும் தனியாக வந்து மாட்டிக்கொண்ட பிரவீன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒடினார்.