பழநி, ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். இதனையடுத்து நாடு முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. தமிழகத்தில் 7 நாட்கள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் திமுகவினர் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.