திருத்தணி, ஆக.14: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வரும் 25ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று, வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவரும் தலைவர் பூரண நலம் பெற்று நாடு திரும்பும் வகையில் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை, அபிஷேகம் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உபகரணங்கள் வழங்க ேவண்டும். அதுமட்டுமின்றி தேமுதிக வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கல்வெட்டுகள் திறக்க வேண்டும்.