திருவள்ளூர், ஆக. 14: சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (15ம் தேதி) மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும், சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும். இதில், மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக்குழு அங்கத்தினர், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சுதந்திரத்தினத்தன்று (15ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில், பிளாஸ்டிக் தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், குடிநீர் சிக்கனம், டெங்கு தடுப்பு நடவடிக்கை,