தாரமங்கலம், ஆக். 13: சுதந்திர தினத்தன்று மரக்கன்றுகள் நட, தாரமங்கலம் அரசு பள்ளிக்கு கேரள கவர்னர் சதாசிவம் ரூ. 5 ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளார். தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தில் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு, தாரமங்கலம் கல்வியாளர் பக்தவத்சலம் விண்ணப்பம் அனுப்பினார்.