சுதந்திர தினத்தில் மரக்கன்றுகள் நட தாரமங்கலம் அரசு பள்ளிக்கு ரூ. 5 ஆயிரம் நன்கொடை

தாரமங்கலம்,  ஆக். 13:  சுதந்திர தினத்தன்று மரக்கன்றுகள் நட, தாரமங்கலம் அரசு பள்ளிக்கு கேரள கவர்னர் சதாசிவம் ரூ. 5 ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளார். தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் அரசு நடுநிலைப்பள்ளியில்  தூய்மை இந்தியா திட்டத்தில் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு, தாரமங்கலம் கல்வியாளர் பக்தவத்சலம் விண்ணப்பம் அனுப்பினார்.

அதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், பள்ளியில் மரக்கன்றுகள் நட ரூ. 5ஆயிரத்துக்கான காசோலையை அனுப்பினார். இதனைக்கொண்டு சேலம் நர்சரியில்  மரக்கன்றுகள் வாங்கி வரும் சுதந்திர தினத்தன்று பள்ளி வளாகத்தில் நடப்படும்  என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் கூறினார். கவர்னரின் இந்த  உதவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: