புவனகிரி, ஆக. 13: புவனகிரி அருகே உள்ளது பு.மணவெளி கிராமம். பூதவராயன்பேட்டை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பயணிகள் பஸ் ஏறுவதற்கு வசதியாக பயணிகள் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டது. ஆனால் இந்த நிழற்குடை சமீபகாலமாக மிகவும் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்த நிழற்குடையில்தான் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர். பயணிகள் நிழற்குடையின் மேல் காரை உடைந்துள்ளதால், வெயிலிலும், மழையிலும் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க நிழற்குடைக்கு மேல், தென்னங்கீற்றால் அடைப்பு அடைக்கப்பட்டுள்ள அவல நிலையில் இந்த நிழற்குடை காட்சி அளிக்கிறது.