பெரம்பலூர்,ஆக.13: நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் அரசு மான்ய உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்களை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் கல்பாடி மற்றும் பேரளியில் தலா ரூ.10லட்சம் அரசு மானிய நிதி உதவியுடன் கூடிய ரூ.13 லட்சம் மதிப்பிலான மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்களை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின்கீழ் 2016-17ம் ஆண்டில் கல்பாடி, கொளக்காநத்தம், மருவத்தூர், வேப்பூர், பசும்பலூர், வெண்பாவூர் ஆகிய 6 தொகுப்பிலும் ஒவ்வொரு தொகுப்புகளிலும் நுழைவு முகப்பு பணிக்காக ரூ.5 லட்சம் மதிப்பில் தடுப்பணையுடன், மழைநீர் சேகரிப்புக் கட்டு மானங்களான வயல்வரப்புகள், பண்ணைக் குட்டைகள் உள்ளிட்டவைகள் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.