சீர்காழி நகர கூட்டுறவு வங்கி தேர்தல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

சீர்காழி, ஆக.13: சீர்காழியில் நகர கூட்டுறவு வங்கியில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக பக்கிரிசாமி, துணைத் தலைவராக மணி, இயக்குனர்களாக ராமலிங்கம், மூர்த்தி, சம்பந்தம், செல் கார்த்திக், பாலமுருகன், மதிவாணன், விஜயா, மஞ்சு, திரிபுரசுந்தரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராமலிங்கம் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு வங்கி அதிகார்கள், ஊழியர்கள் பாராட்டை தெரிவித்தனர்.

Related Stories: