தரங்கம்பாடி, ஆக.13: தரங்கம்பாடி அருகே ஊராட்சிக்கு சொந்தமாக அடிகுழாய் ஓராண்டாக உடைந்து கிடப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தரங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காழியப்பநல்லூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக அடிகுழாய் ஒன்று இருந்தது. அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அதை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஓராண்டாக உடைந்து கிடக்கும் அந்த அடிகுழாயை ஊராட்சி நிர்வாகம் பழுது பார்க்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவர் கூறுகையில், இந்த அடிகுழாய் மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீரை பெற்று வந்தனர்.