கிருஷ்ணகிரி, ஆக.13: ஓசூர்சென்னை வரையில் விமான சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி எம்பி அசோக்குமார் வலியுறுத்தினார். அவர் பேசியதாவது: ஓசூர் நகரம் தொழிற்சாலைகள் நிறைந்தது. சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் ஓசூரிலிருந்து 83 கிமீ தொலைவில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தேவனஹள்ளி விமான நிலையம் சென்றடைய 2.30 மணி நேரத்திற்கும் மேலாகிறது. சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விமானத்தை தவறவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில், ஓசூரில் இருந்து சென்னைக்கு அறிவிக்கப்பட்ட விமான சேவைத் திட்டத்தில், இரண்டாம் நிலை உள்ளூர் மாவட்டங்களை இணைத்து ஏழை மக்களும் இச்சேவையை பெறும் வகையில் புதிய விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.