அரக்கோணம்,ஆக.13: அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக ஆந்திரா செல்லும் ரயில்களில், ஒரு சிலர் ரேஷன் அரிசியை அடிக்கடி கடத்தி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமையில் ஊழியர்கள் நேற்று சென்னையில் இருந்து திருப்பதிக்கும், புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.