தஞ்சை, ஆக. 9: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை காலாமானார். இதனால் மாவட்டம் முழுவதும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி மறைவையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது. தஞ்சை மாநகர பகுதியில் உள்ள தெற்கலங்கம், கீழவீதி, தெற்கு வீதி, கீழவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தஞ்சை பழைய, புதிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் இயங்கவில்லை. மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. திமுகவினர் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு சட்டை அணிந்தும், கருப்புக்கொடியும் குத்தியிருந்தனர். மேலும் ஒவ்வொரு தெருக்களிலும் கருணாநிதி உருவப்படத்தை வைத்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. நகர பஸ்ஸ்டாண்ட் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. ஆட்டோக்கள் இயங்கவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோ, கார், வேன்கள் இயங்கவில்லை. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. இதபோல் பேராவூரணி பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.