நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 21:   மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது. இந்த வரன்முறைப்படி பென்சனர்களுக்கு கடந்த 1.1.17 முதல் பென்சன் தொகையை மாற்றி அமைத்து வழங்க கோரி அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் சார்பில் நாகர்கோவில் பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். செயலாளர் செல்லையா, பொருளாளர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: