காரைக்கால், ஜூன் 21: முத்ரா வங்கி கடனுதவி திட்டத்தை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கிராமமக்கள் பயன்படுத்தி சுய வருவாமனத்தை பெருக்கி கொள்ள வேண்டுமென புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. மகளிர் சுயஉதவி குழுவினரின் பணிகள், அரசின் திட்டங்களை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா பேசினார். புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது: மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கடனை பெறுவதற்கு இத்திட்டத்தில் எளிய வழிமுறைள் உள்ளதால் சிறு தொழில் முதல் நடுத்தர தொழில் வரை நகரம் மற்றும் கிராம மக்கள் இத்திட்டத்தின் உதவியை பெற்று தொழில் செய்ய முடியும். எனவே இத்திட்டத்தை கிராம மககள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் குடும்பத்தின் சுமை வெகுவாக குறையும். இதில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.