அரியலூர், ஜூன் 20: அரியலூரில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவினை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காமராஜர் சிலை முன்பாக கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முன்னிலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதையடுத்து கட்சியினர் கேக் வெட்டினர். பின்னர் பொதுமக்களுக்கு கேக் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்–்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர துணை தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொது செயலாளர் அமானுல்லா, சேவாதளம் சிவா. விவசாய பிரிவு பழனிமுத்து, ஐஎன்டியூசி நிர்வாகி ராஜா, இளைஞரணி நிர்வாகி பாலகிருஸஷ்ணன், நகர பிரதிநிதிகள் கலியன், ரகுபதி ராஜேந்திரன், தெய்வகுமார், குலேந்திரன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.