வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

அரியலூர், ஜூன் 16: கீழப்பழுவூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான நேர்காணல் வரும் 18ம் தேதி நடக்கிறது.

கீழப்பழூர் ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வீடியோ மற்றும் போட்டோ கிராபி மற்றும் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. பயிற்சி முகாமிற்கான நேர்காணல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கு 18 முதல் 45 வரையுள்ள எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. நேர்காணலில் பங்கேற்க குடும்ப அட்டை நகல், கல்வி சான்று நகல், பாஸ்போட் சைஸ் போட்டோக்கள், வறுமை கோட்டு எண்களை எடுத்துவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழப்பழுவூர் ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பயிற்சி நிறுவன இயக்குநர் வெங்கிடாசலம் தெரிவித்துள்ளார்.

Related Stories: