காரமடை: காரமடை- தோலம்பாளையம் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் சரவணகுமார் (40), கீதா (34) தம்பதி. இவர்கள் அப்பகுதியில் விலை குறைவாகவும், அதே நேரத்தில் தரத்துடனும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அருகிலேயே தோலம்பாளையம் சாலையில் ஓட்டல் நடத்தி வரும் வெள்ளியங்காடு பிரபு (34), நேற்று மதுபோதையில், தொழிலாளர்கள் ஞானசேகர் (54), விஜயகுமார் (52) ஆகியோருடன் கீதா - சரவணகுமார் தம்பதி நடத்தும் ஓட்டலுக்கு சென்று, எங்களை விட விலை குறைவாக ஏன் விற்கிறீர்கள் என கேட்டு தாக்கியுள்ளனர்.