சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ.ரவீந்திரன் தலைமையில் என்எல்சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்ற போது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பது தான். கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்னையே என்.எல்.சி நிலப்பறிப்பு தான். அடிப்படை சிக்கலான என்எல்சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்.