ஹைடெக் சிட்டியாக மாறும் சென்னை, கோவை, ஓசூர்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: இந்திய அளவில் பெண்கள் பணிபுரிவதற்கு பாதுகாப்பான நகர பட்டியலில் தமிழ்நாட்டில் முதலிடத்தில் சென்னை, 2வது கோவை, 3வது மதுரை. அதற்கடுத்தபடியாக திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையில், 3 ஹைடெக் சிட்டி ஒன்று சென்னையிலும், இன்னொன்று ஓசூரிலும், மற்றொன்று கோவையிலும் வெகு விரைவில் வரவிருக்கிறது. அதை உலக தரத்தில் எல்லா வசதிகளோடும் அடிப்படை கட்டமைப்புகளை நாம் ஏற்படுத்த இருக்கிறோம்.

Related Stories: