சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர ராஜா பேசுகையில், ‘‘விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி வேம்புலி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான 3.35 சென்ட் இடம் இருக்கிறது. அதில் குளம் என்பது 2 ஏக்கரில் மட்டும் தான் இருக்கிறது. மீதி இருக்கக்கூடிய 1.35 சென்ட் காலி இடத்தில் அடக்கஸ்தலம் அமைக்க பரிசீலனை செய்ய வேண்டும்,’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசுகையில், ‘‘முதல்வரின் சிறப்பு திட்டமாக அரசு புறம்போக்கு நிலங்களில் கபஸ்தலம் மற்றும் கல்லறைகள் அமைக்க, அந்ததந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையினை மாவட்ட கலெக்டர்கள் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய இடங்களை பெற்று தருவது, அந்த பகுதியில் இடம் இல்லை என்று சொன்னால் தனியாருக்கு சொந்தமான இடத்தினை பேச்சு வார்த்தை மூலமாக பேசி, அந்தப் பங்களிப்பை அரசாங்கம் சார்பாக, துறை சார்பாக பங்களிப்பு அளிப்பதற்காக தலா ரூ.1 கோடி வழங்கியிருக்கிறார். எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.