ஆவடி: ஆவடி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா(32). இவரது கணவர் வருண்(40). கூலி தொழிலாளி. இவரது தம்பி குரு சத்தியா(29). கூலி தொழிலாளி. இந்நிலையில், கடந்த 16ம் தேதி மைத்துனரான குரு சத்தியா வழக்கம் போல் மதுபோதையில் அண்ணியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த சத்தியா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணியின் கை மற்றும் காலில் வெட்டினார். இதில், காயம் ஏற்பட்ட சுகன்யாவிற்கு வலியால் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். எனவே, சத்தியா அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.