ஆரணியில் திமுக தெருமுனைக்கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் திமுக தெருமுனைக்கூட்டம் நடந்தது. பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் பேரூர் திமுக சார்பில் தெருமுனைக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போரூர் செயலாளர் முத்து தலைமை தாங்கினார். பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், கண்ணதாசன், ரமேஷ், கரிகாலன் கோபிநாத், நிலவழகன், கலையரசி, பொன்னரசி,  குருவப்பா ஆகியோர் வரவேற்றனர்.

சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், மணிபாலன், ஜெகதீசன், அவைத்தலைவர் ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் பகலவன்,  மாவட்ட துணைச்செயலாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், ரமேஷ், தண்டலம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பார்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி, சாம்ராஜ் ஆகியோர்  சிறப்புரையாற்றி 500 பேருக்கு புடவை மற்றும் மருத்துவ  நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.  

இந்நிகழ்ச்சியில் ஆனந்தகுமார், பாலமுருகன், ஜெயக்குமார், தமிழழகன், ரோஸ் பொன்னையா, பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி,கவுன்சிலர்கள் சுபாஷினி ரவி, கவுசல்யா தினேஷ், அனுமந்தன், வக்கில் கவியரசு உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பொருளாளர் கரிகாலன், வார்டு செயலாளர் நீலகண்டன் நன்றி கூறினர்.

Related Stories: