திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (30). இவர், திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு பைக் ஹோரூமில் மெக்கானிக்காக வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடித்து மேகநாதன் வீட்டிற்கு தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் சென்றபோது மாமல்லபுரத்திலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி வேகமாக வந்த ஒரு அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் மெக்கானிக் மேகநாதன் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.