சென்னை: சென்னையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து மெட்ரோ மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த முயற்சி தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பயண அனுபவத்தை மிகவும் இனிமையானதாக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகளில் வசதியான இருக்கைகள், டயபர் மாற்றும் ஸ்லாப் மற்றும் மின்விசிறி போன்றவை கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.