கரூர், மே26: ஏமூர்- சீத்தப்பட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் திருச்சி பைபாஸ் சாலையின் இருபுறமும் ஏமூர், ஏமூர் புதூர் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியின் வழியாக மேம்பாலத்தின் கீழ்ப்புறம் உள்ள குகைவழிப்பாதையின் வழியாக சீத்தப்பட்டி, வெள்ளியணை போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை வசதி உள்ளது. கரூரில் இருந்து நகரப் பேரூந்துகளும், மினி பஸ்களும் இந்த சாலையின் வழியாக சென்று வருகிறது.