பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது

பெங்களுரு: பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் கோரமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூங்காவில் ஏராளமானோர் தினமும் வந்து செல்வது வழக்கம். கடந்த பிப்ரவரி 25ம் தேதி இரவில் இளம்பெண் ஒருவர் இந்த பூங்காவில் தனது நண்பருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சென்ற மர்மநபர்கள் அவர்கள் 2 பேரிடமும் தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து இளம்பெண்ணின் நண்பரை அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதை தடுக்க சென்ற இளம்பெண்ணையும் தாக்கி காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளது. சுமார் 8 மணி நேரம் இளம்பெண்ணை அந்த கும்பல் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோரமங்களா போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரின் விசாரணை மேற்கொண்ட போலீசார் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த 4 போரையும் கைது செய்தது.

Related Stories: