மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் வருகிற ஏப்ரல் 4ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவு

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் வருகிற ஏப்ரல் 4ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 4ம் தேதி நாடு மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. மகாவீர் ஜெயந்தி அன்று சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம், அந்த வகையில் இந்த வருடமும் மகாவீர் ஜெயந்தி அன்று சென்னையில் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவீர் ஜெயந்தியை வரும் ஏப்ரல் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில்: ஏப்ரல் 4-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: