சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உணவு பொருள் விலை வழக்கு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டது. இலவசமாக குடிநீர் வசதி, கழிப்பறை வசதி அமைக்கப்படவில்லை என ஏ.எஸ். சண்முகராஜன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: