சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருட்டு

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் திருடு போன நகைகள் குறித்து கடந்த மாதம் தான் தெரியவந்ததாக போலீசில் புகார் அளித்தார். விஜய் ஏசுதாஸ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: